உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் மதிமுக சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாவட்ட அவை தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கன்னியப்பன் வரவேற்றார். காஞ்சி மாவட்ட செயலாளர் வலையாபதி, மாவட்ட துணை செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை.சத்யா, மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர் ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் தலைவர் ஆதரிக்கும் வேட்பாளரை அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற தீவிரமாக பாடுபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கட்சி வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post சாலவாக்கம் கிராமத்தில் மதிமுக ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.