இதன் தொடர்ச்சியாக 70,000 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “உலகளவில் இந்திய வங்கித்துறை வலுவாக உள்ளது. வங்கிகள் கட்டமைப்பில் உலகில் உள்ள நாடுகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது.9 ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட குடும்பத்திற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே கடன் கிடைத்தது. கடந்த ஆட்சியில் நமது நாட்டின் வங்கித்துறை அழிவை சந்தித்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய முடிகிறது.அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆண்டுகளாக இருக்கும். வளர்ச்சியின் பாதையில் நாடு சென்று கொண்டு இருக்கும் போது, அரசு ஊழியராக இருப்பது நல்ல வாய்ப்பு,”என்றார்.
The post 70,000 பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி… அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியம் எனவும் பேச்சு!! appeared first on Dinakaran.