பஞ்சாபில் நாளை மறுநாள் முதல் அரசு அலுவலகங்கள் வழக்கமான நேரத்தில் இயங்கும்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கோடை காலம் மற்றும் மின் தேவையை குறைக்கும் வகையில் மே மாதம் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. இதன்படி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கி வந்தது. இந்நிலையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரமானது வழக்கம் போல் மாற்றப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் (17ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி அரசு அலுவலங்கள் செயல்படும் என மாநில தலைமை செயலாளர் அனுராக் வர்மா அறிவித்துள்ளார்.

The post பஞ்சாபில் நாளை மறுநாள் முதல் அரசு அலுவலகங்கள் வழக்கமான நேரத்தில் இயங்கும் appeared first on Dinakaran.

Related Stories: