தனியார் மருத்துவமனையில் அனுமதி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய தகவலின்படி, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தனியார் மருத்துவமனையில் அனுமதி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா appeared first on Dinakaran.

Related Stories: