காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு தங்கள் பகுதியில் இல்லை என்பதால் குடிநீர் தட்டுப்பாடு தொடர்வதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். போராட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் ஆறு பேரும் காலி குடங்களை தலையில் சுமந்தபடி பங்கேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சிலர் மொட்டையடித்து எதிர்ப்பு தெரிவிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு செல்வதற்கே 3 பேருந்துகளில் மாரி மாரி செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறும் கவுன்சிலர்கள் தொடர்ந்து தங்கள் கிராமத்தை அதிகாரிகள் புறக்கணித்து வருவதாக புகார் தெரிவித்தனர்.
The post சிக்கல் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு: 12 கவுன்சிலர்களும் ராஜினாமா கடிதத்துடன் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் appeared first on Dinakaran.