தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல், ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பிரேம்குமார் தலைமை வகித்தனர். இதில் ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, தமிழ்நாடு அரசு பொறுப்பு பதிவாளரை நீக்கி விட்டு, இந்திய ஆட்சிப்பணி அதிகாரியை நியமிக்க வேண்டும். துணைவேந்தரின் பதவி நீட்டிப்பை ரத்து செய்ய, சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
The post துணைவேந்தர் பதவி நீட்டிப்பு எதிர்த்து பெரியார் பல்கலை. முன்பு போராட்டம் appeared first on Dinakaran.