இதனால், கடல் அரிப்பு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு என சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படுகின்றன. எனவே, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 கடலோர மாவட்டங்களில் 1,076 கி.மீ. பரப்பளவில், ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை நாளை (1ம் தேதி) துவங்குகிறோம். அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில், 22 லட்சம் பனை விதைகள் நடப்படும். இப்பணியில், ஒரு லட்சம் என்.எஸ்.எஸ். மாணவர்களும், கிரீன் நீடா போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் தன்னார்வலர்களும் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post 1 கோடி பனை விதைகள் நடும் பணி: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.