அதன் அடிப்படையில் நேற்று காலை புளியந்தோப்பு ஸ்டாரன்ஸ் ரோடு, அடுக்குமாடி குடியிருப்பு அருகே சந்தேகப்படும்படியான நபரை பிடித்து விசாரணை செய்தனர். அவரிடம் வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் புளியந்தோப்பு கேஎம் கார்டன் 6வது தெருவைச் சேர்ந்த வல்லரசு (23) என்பதும், அவரிடம் 10 வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில், அவரது தம்பி பேரரசு (19) மற்றும் ஓட்டேரி கொடிக்கடை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 35 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பரத் என்பவர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வல்லரசு, பேரரசு, ஆகாஷ் ஆகிய 3 பேரை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பரத் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.
The post புளியந்தோப்பு பகுதியில் போதை மாத்திரைகள் பயன்படுத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.