பின்னர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். கைதான இருவரும் மற்ற சிறுமிகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் இன்று காலை 500க்கும் மேற்பட்ட பெற்றோர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post மாணவியை சில்மிஷம் செய்த 2 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய கோரி தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்: கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.