இழுபறி நீடித்த நிலையில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி ஆட்சியமைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃபின் பெயர் பாகிஸ்தான் பிரதமராக பரிந்துரைக்கப்பட்டது. அவரை எதிர்த்து இம்ரான் கானின் தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சி சார்பில் ஒமர் அயூப் கான் களமிறக்கப்பட்டார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 336 உறுப்பினர்களில் 201 பேர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இம்ரான் கான் கட்சி வேட்பாளர் 92 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இதையடுத்து ஷெபாஸ் ஷெரீஃப் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய ஷெபாஸ், “ காஷ்மீரிகள், பாலஸ்தீனர்களின் விடுதலைக்காக ஒரு தீர்மானத்தை அரசு நிறைவேற்றும்” என்றார். இன்று நடைபெற உள்ள விழாவில் 33வது பிரதமராக ஷெபாஸ் பதவி ஏற்க உள்ளார்.
பாவம் அவரே குழம்பிட்டாரு..
நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் ஷெபாஸ் ஷெரீஃப் எதிர்க்கட்சி தலைவரான நான் என்று பேச அதை கேட்ட எம்பிக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
The post பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு appeared first on Dinakaran.