மனைவியுடன் தகராறில் விஷம் குடித்த பெயின்டர் பரிதாப பலி

திருத்தணி: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், விஜயபுரம் மண்டலம் மகாராஜபுரம் ஆதி ஆந்திரவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (37), பெயின்டர். இவரது மனைவி சுமித்ரா (24). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த சுப்பிரமணி, கனகம்மாசத்திரம் அருகில் பனபாக்கம் சுடுகாடு அருகில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதல் சிகிச்சைக்கு பின்னர் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கேஎம்சி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று சுப்பிரமணி உயிரிழந்தார். இதுதொடர்பாக சுமித்ரா அளித்த புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவியுடன் தகராறில் விஷம் குடித்த பெயின்டர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: