எதிர்பாராதவிதமாக பைக் தடுமாறி, மூவரும் கீழே விழுந்ததையடுத்து சுமித்ரா கூச்சல் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்து 3 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஓட்டேரி போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பெரம்பூர் பி.பி.சாலையைச் சேர்ந்த ஹரிஷ் மாலி (22), ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதில் ஹரிஷ் மாலி மீது ஏற்கனவே 4 குற்ற வழக்குகள் உள்ளன. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறுவனை சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைத்து, மற்ற இருவரை சிறையில் அடைத்தனர்.
The post ஓட்டேரியில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது: பைக்கில் இருந்து தவறி விழுந்ததால் சிக்கினர் appeared first on Dinakaran.
