தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனே மாற்ற மின்வாரியம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனே மாற்ற மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. பழுதடைந்த மின் மீட்டர்களை மாற்ற பொறியாளர்களுக்கு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். நுகர்வோரின் வசதி, உரிய வருவாயை ஈட்ட, பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அது குறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

The post தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனே மாற்ற மின்வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: