கேரளாவில் 2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் நேற்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இந்தநிலையில் நேற்று முதல் 5 நாட்களுக்கு கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நேற்று ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் உள்பட 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்று கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்த இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் 2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் appeared first on Dinakaran.

Related Stories: