2024 தேர்தலில் பாஜவை வீழ்த்த எதிர்கட்சிகளின் வாக்குகள் சிதறக்கூடாது: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

திருவாரூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திருவாரூரில் அளித்த பேட்டி: திமுக 2 ஆண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த 2 ஆண்டு கால ஆட்சி உழைக்கும் மக்களுக்கான ஆட்சியாகவும், சமூக நீதிக்கான ஆட்சியாகவும், அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படுகிற ஒரு நிர்வாகமாகவும் இயங்கி கொண்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி, பாராட்டு தெரிவிப்பதுடன் எஞ்சிய 3 ஆண்டுகளும் மீண்டும் மக்களுடைய செல்வாக்கை பெற வாழ்த்துகிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் முதல்வர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை 80 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். நிலுவையில் உள்ள சில வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எந்தெந்த வகையில் எல்லாம் இந்தியை திணிக்க முடியுமோ அந்தந்த வகையில் பாஜ செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் கூட அனைத்து விதத்திலும் ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மாறியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறிவிடாமல் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் பாஜகவை வீழ்த்த முடியும் இவ்வாறு அவர் கூறினார்.

The post 2024 தேர்தலில் பாஜவை வீழ்த்த எதிர்கட்சிகளின் வாக்குகள் சிதறக்கூடாது: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: