இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இன்னோவா காரை பறிமுதல் செய்தனர். இதனை ஓட்டி வந்த பாலசந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த நபர் யார் என்பது குறித்து அவரது மொபைல் போன் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
The post பைக் மீது கார் மோதி முதியவர் பரிதாப பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.