தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள திருமண உதவித் தொகை திட்டத்தை பின்பற்றி ஏழை பெண்களுக்கு ரூ. 25,000 திருமண உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஒடிசா என்ற திட்டத்தின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.14, 000மும் மாணவர்களுக்கு ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுய உதவிக்குழுக்களுக்கு வட்டி இல்லாத கடன் ரூ. 15 லட்சமாக உயர்த்தப்படும், நாட்டிலேயே முதன்முறையாக இளைஞர் மேம்பாட்டுக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் தனது நூற்றாண்டை 2036ம் ஆண்டு கொண்டாட உள்ள நிலையில்,2034ம் ஆண்டிற்குள் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக ஒடிசா மாற்றப்படும் என்று பிஜு ஜனதா தள தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
The post 100 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.25,000 திருமண உதவித்தொகை : பிஜூ ஜனதா தேர்தல் அறிக்கையில் எதிரொலிக்கும் திராவிட மாடல் appeared first on Dinakaran.