கேரளாவில் 3 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் 3 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. கடந்த சில தினங்களாக மழையின் தீவிரம் சற்று குறைந்து இருந்தது.

இந்தநிலையில் நேற்று முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பதால் அடுத்த 3 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

The post கேரளாவில் 3 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: