அதற்காக பீகார் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், நேற்று பாட்னாவில் ‘ஜன் சுராஜ்’ பரப்புரையின் மாநில அளவிலான பயிலரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோா் பேசுகையில், ‘ஏற்கெனவே நான் கூறியதுபோல வருகிற அக்டோபர் 2ம் தேதி (மகாத்மா காந்தி பிறந்த நாள்) ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளேன். அடுத்த ஆண்டு பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ‘ஜன் சுராஜ்’ கட்சி போட்டியிடும். கட்சியின் தலைவர் யார் போன்ற பிற விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’ என்றார். நேற்று நடந்த பயிலரங்கில் பீகார் முன்னாள் முதல்வரும், ‘பாரத ரத்னா’ விருது பெற்றவருமான கர்பூரி தாக்கூரின் பேத்தி ஜக்ரிதி தாக்கூர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று; ‘ஜன் சுராஜ்’ அமைப்பை கட்சியாக்கும் பிரசாந்த் கிஷோர்: 2025 பீகார் தேர்தலில் போட்டி appeared first on Dinakaran.