இந்நிலையில் நேற்று மாலை கணவர் அமித் குமார் வீட்டில் இல்லாத நேரத்தில் வயிற்று வலி அதிகமானதால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி போலீசார் மயங்கிய நிலையில் இருந்த பிஸ்மிதா பத்ராவை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.