நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூட்டடா பகுதியில் மின்சாரம் தாக்கியதில் அரசுப்பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். கோத்தகிரி நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது அறுந்து கிடந்த மின் வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரதாப் (42) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.