×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாய்க்குள் பெண் மர்ம சாவு

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 18: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெண் கண்மாய்க்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் அருகேயுள்ள ஓடக்கரை கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மனைவி காஞ்சனா(38). இவர் வீட்டில் உள்ள குப்பையை கொட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள குப்பைமேட்டிற்கு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் உறவினர்கள் தேடி பார்க்கும் போது ஓடக்கரை அருகே உள்ள ஆனந்தூர் கண்மாயின் கிழக்கு பகுதியில் கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து காஞ்சனாவின் மகள் அபிநயா, ஆர்.எஸ்.மங்கலம் ேபாலீசாரிடம் புகார் செய்தார். காஞ்சனா மர்ம சாவு குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : mystery death ,RS Mangalam ,
× RELATED இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில்...