×

கல்லேரிப்பட்டி அரசு பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

ஆத்தூர், மார்ச் 13: கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம், தலைமை ஆசிரியை அமுதா தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் ஜேஆர்சி அமைப்பின் சார்பில், ஆசிரியர் ஜோசப் ராஜ் கொரோனா வைரஸ் பரவும் முறைகள், அதனை தடுப்பது குறித்தும், எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது என்பது குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்களுக்கு விளக்கிக் கூறினார்.

மேலும் கைகழுவும் முறைகளையும், தும்மல் வந்தால் எப்படி தும்முவது, கைகுலுக்க கூடாது என்பது குறித்து மாணவ, மாணவிகள் செயல்முறையில் நடித்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முகாமில் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள குறும்படம், பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

Tags : Coronavirus Awareness Camp ,Galeripparthi Government School ,
× RELATED தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்