×

இருதரப்பு மோதலில் 2 வாலிபர்கள் கைது

 

கெங்கவல்லி, ஏப்.29: வீரகனூர் அருகே பகடப்பாடி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் முத்துக்குமார்(22). இவர் விவசாய தோட்டத்தில் உள்ள சோளமூட்டைகளை எடுப்பதற்காக, தனது டிராக்டரில் வெள்ளையூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நூத்தப்பூரைச் சேர்ந்த முத்தையன் மகன் அழகுவேல் என்பவர் ஓட்டி வந்த கார் மீது டிராக்டர் மோதியது. இதில், காரின் முன்பக்கம் நொறுங்கியதுடன், அழகுவேலுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் சமாதானமாக சென்று விடலாம் என, ஊர் முக்கியஸ்தர்கள் பேசி முத்துக்குமாரிடமிருந்து, அழகுவேலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை பெற்று தருவதாக முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஊர் முக்கியஸ்தர்கள் பேசிய தொகையை விட, அழகுவேல் அதிகம் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில், அழகுவேல் அவரது மகன்கள் லோகேஸ்வரன், வெங்கடேஷ் 3பேர் சேர்ந்து, முத்துக்குமார், அவரது தந்தை வேல்முருகன், தாயார் அமுதா, தங்கை அபினா ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த 4 பேரும், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதுகுறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில், வீரகனூர் எஸ்ஐ கார்த்திக் வழக்குப்பதிவு செய்து, அழகுவேல், அவரது மகன்கள் யோகேஸ்வரன்(25), வெங்கடேஷ்(24) உள்ளிட்ட 3 பேர் மீது, நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, லோகேஸ்வரன், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தார். மேலும், அழகுவேலை போலீசார் தேடி வருகின்றனர்.

The post இருதரப்பு மோதலில் 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Muthukumar ,Velmurugan ,Bhagadappadi ,Weerakanur ,Valliyur road ,Muthaiyan ,Noothapur ,Akguvel ,Dinakaran ,
× RELATED ஒரு கிலோ பாக்கு ₹900க்கு விற்பனை