×

நெடுஞ்சாலையில் சாய்ந்த மின்கம்பம் அசம்பாவிதம் தவிர்ப்பு

ஓசூர், மார்ச் 5:ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், மின்கம்பம் ஒன்று திடீரென நெடுஞ்சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. அப்போது வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. லேசான காற்றுக்கே மின் கம்பம் சாய்ந்து விழுந்ததால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களின் தரத்தை உடனடி ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : highway ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!