×

டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி

ஊத்தங்கரை, ஏப்.24: தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மாம்பட்டி அடுத்த சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(38). இவர் நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று ராஜா தனது டூவீலரில் ஊத்தங்கரையில் இருந்து அரூர் நோக்கி சென்றுள்ளார். காட்டேரி அருகே சென்ற போது எதிரே அரூர் அருகே உள்ள எஸ்.பட்டியை சேர்ந்த சீனிவாசன்(28) என்பவர் ஓட்டி வந்த டூவீலர், ராஜாவின் டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Oothangarai ,Raja ,Chandrapuram ,Mambatti ,Dharmapuri district ,Arur circle ,Arur ,Uthankarai ,Dinakaran ,
× RELATED கோயில் கும்பாபிஷேகத்திற்கு பூஜை...