×

சாலையை கடந்த மான் வாகனம் மோதி பலி

போச்சம்பள்ளி, ஏப். 26: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலால் நீர்நிலைகள் வற்றிப்போயுள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் கிராமங்களுக்குள் வருவது அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு, போச்சம்பள்ளி அடுத்த தொகரப்பள்ளி காப்பு பகுதியில் இருந்து மான் ஒன்று தண்ணீர் தேடி கிராமப்பகுதிக்கு செல்ல சாலையை கடந்ததுள்ளது. அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் உடல் நசுங்கி உயிரிழந்தது. இரவில் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் மோதியதில் மானின் உடல் உருக்குலைந்து போனது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மானின் உடலை ்மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் புதைக்க நடவடிக்கை எடுத்தனர்.

The post சாலையை கடந்த மான் வாகனம் மோதி பலி appeared first on Dinakaran.

Tags : Bochampalli ,Krishnagiri district ,Pochampalli ,Thogarapally ,Bava ,Antelope ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...