×

தந்தையுடன் ஏரியில் குளித்த 7வயது சிறுமி நீரில் மூழ்கி பலி

தேன்கனிக்கோட்டை, ஏப். 24: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி டவுன் சிப்பாய் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பர்கானாதாஜ்(30). கூலித் தொழிலாளியான இவருக்கு அபியா(7) என்ற பெண் குழந்தை உள்ளது. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ம்வகுப்பு படித்து வந்தாள், பர்கானா தாஜ் தன்னுடைய மகள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த சானியா நர்கீஸ் உடன், நேற்று முன்தினம் மாலை தண்டரை கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை. அதிர்ச்சியடைந்தவர்கள் தண்ணீரில் தேடியபோது சிறுமி நீரில் மூழ்கி மயங்கிய நிலையில் மீட்டனர். உடனடியாக சிறுமியை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலின் பேரில் அதியமான் கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

The post தந்தையுடன் ஏரியில் குளித்த 7வயது சிறுமி நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Barganadaj ,Madigiri Town Sippalayam, Krishnagiri District ,Abia ,Pargana Taj ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு