×

பாலூட்டும் அறையை சீரமைக்க வலியுறுத்தல்

ஓசூர், ஏப்.25: தமிழகம் முழுவதுமாக மாநகராட்சி, நகராட்சி பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது. இந்த அறையில் இருக்கைகள், மின்விசிறி, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. பஸ் நிலையங்களில் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இது மிகுந்த வரப்பிரசாதமாக அமைந்தது. அதன்படி, ஓசூர் பஸ் நிலையத்திலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் இந்த அறையை தற்போது ஆண்கள், குறிப்பாக குடிமகன்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெண்கள் அங்கு உட்கார கூட முடியவில்லை. மேலும், அறையில் கழிப்பறை சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் தாய்மார்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தாய்மார்கள் பாலூட்டும் அறையை முறையாக பராமரிக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பாலூட்டும் அறையை சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மின்தேவை புதிய உச்சம் 20,830 மெகாவாட் பயன்பாடு: தமிழ்நாடு மின்சார வாரியம்