×

திருவெற்றியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

தொண்டி, பிப். 26:தொண்டி அருகே உள்ள திருவெற்றியூர் ஆரம்ப சுகாதார நிலையத்ததைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் நலனை கவனத்தில் கொண்டு சுற்றுச்சுவர் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே உள்ள திருவெற்றியூரில் ஆரம்ப சுகாதார நலையம் உள்ளது. இம்மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து நோயாளிகளும் வருகின்றனர்.

ஊரின் வெளிப்புறத்தில் இம்மருத்துவமனை அமைந்துள்ளதால் இரவு நேரத்தில் அச்சம் ஏற்படுகிறது. மேலும் இம்மருத்துவமனையின் அருகில் சுடுகாடு இருப்பதால் பிணங்களை எரிக்கும்போது ஏற்படும் புகை நேரடியாக நோளாளிகளை தாக்குகிறது. கற்பிணி பெண்கள் மற்றும் பெண் நோயாளிகள் இங்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். அதனால் சுகாதார நிலையத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறிதது திருவெற்றியூரைச் சேர்ந்த கணேசன் கூறுகையில், ‘ஊரை விட்டு வெளியே மருத்துவமனை உள்ளது. அதற்கும் சுற்றுச்சுவர் இல்லை. சுடுகாடு அருகில் உள்ளது. அதனால் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : circuit ,Thiruvettiyoor Primary Health Center ,
× RELATED ஊட்டி வருகை தரும் சுற்றுலா பயணிகள் வசதிக்கு சர்க்கியூட் பேருந்து சேவை