×

அழகு நிலையங்களில் விபசாரம் இளம்பெண்கள் 35 பேர் மீட்பு

சேலம், ஜன.30: சேலத்தில் அழகு நிலையத்தில் விபசாரம் நடத்தியது தொடர்பாக 15 பேர் கைது செய்த போலீசார் 35 இளம்பெண்களை மீட்டனர். சேலம் அத்வைத ஆசிரம ரோட்டில் அழகுநிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அழகுநிலையத்தில் வெளிமாநில பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுவதாக அழகாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் சேலம் மாநகரத்தில் பேர்லண்ட்ஸ், பள்ளப்பட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர், அழகு நிலையங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்த 15 உரிமையாளர்கள், மேலாளர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 35 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல்,நேற்றுமுன்தினம் சாதாரண உடையில் அந்த அழகு நிலையத்திற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அழகு நிலையத்திற்குள் 3 இளம்பெண்கள் மற்றும் ஒரு ஆண் இருந்தனர். அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், 3 இளம்பெண்களும் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள். அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். பிடிபட்ட ஆண் மேச்சேரியை சேர்ந்த பிரபு (35) என்பதும், இவர் புரோக்கராக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, 3 பெண்களையும் மீட்ட போலீசார் அரசு மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். புரோக்கர் பிரபுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘அழகுநிலையம் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

Tags :
× RELATED பூஜை முடிவதற்குள் மின்விளக்குகள் நிறுத்தம்