×

6.5 பவுன், வெள்ளி பொருட்கள் திருட்டு

சேலம், மே 14: சேலம் மாசிநாயக்கன்பட்டி மாருதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவுரி(47). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் சென்னையில் படித்து வருகிறார். நேற்று முன்தினம், வீட்டை பூட்டி விட்டு 2வது மகனை பார்க்க, கவுரி சென்னைக்கு சென்று விட்டார். நேற்று அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்திருந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், கவுரிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கவுரி அம்மாப்பேட்டைபோலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரித்தனர். வீட்டிற்கு பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டின் பீரோவில் இருந்த 6.5 பவுன் நகை, 2 லட்சம் மதிப்பு வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனர்.

The post 6.5 பவுன், வெள்ளி பொருட்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Salem ,Gauri ,Maruti Nagar ,Masinayakkanpatti, Salem ,Chennai ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்