×

ஆரோக்கிய இந்தியா சைக்கிள் பேரணி

சாயல்குடி, ஜன. 19: ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் ஆரோக்கிய இந்தியா திட்டத்தின் சைக்களில் பேரணி நடந்தது.ஊரக பகுதி பொதுமக்களிடையே ஆரோக்கியத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை ஊராட்சியில் நடந்த சைக்கிள் பேரணியை கலெக்டர் வீரராகவராவ் துவங்கி வைத்து, சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர். சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்த பேரணியில் ஏராளமான கிராம இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சி) கேசவதாசன், டி.எஸ்.பி வெள்ளத்துரை உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கடலாடி ஊராட்சியில் நடந்த பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி துவக்கி வைத்தார். பேரணிக்கு பஞ்சாயத்து தலைவர் ராஜமாணிக்கலிங்கம்
தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவன், பஞ்சாயத்து செயலர் முனீஸ்வரன் முன்னிலை வகித்தனர். பேரணியில் ஏரளமான இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Health India Cycle Rally ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை