×

கேஸ் கசிவின் காரணமாக தீக்காயம் ஏற்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி சாவு

சேலம், ஜன.9: சேலம் கெங்கவல்லி அருகே கேஸ் சிலிண்டர் கசிவின் காரணமாக தீக்காயம் ஏற்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம் கெங்கவல்லி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மகள்  கௌரி(8). குழந்தைவேல் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனால், கௌரி கெங்கவல்லியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்தநிலையில், கடந்த நவம்பர் 23ம் தேதி, வீட்டில் அடுப்பு பற்ற வைக்கும்போது கேஸ் கசிவின் காரணமாக திடீரென கௌரி மீது தீப்பிடித்தது. கௌரியின் அலறல் சத்தம் கேட்டு அவரது பாட்டி மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக கௌரி உயிரிழந்தார். கடந்த 45 நாட்களாக சிகிச்சையில் இருந்த சிறுமி பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து கெங்கவல்லி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : gas leak ,
× RELATED எண்ணூர் அமோனியா வாயு கசிவு விவகாரம்:...