சிவகங்கை, ஜன. 7: சிவகங்கை கலெக்டர் அலுவலக ஒருங்கிணைந்த வளாகத்தில் மாவட்ட க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கான புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சிவகங்கை அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி ரோகித்நாதன் ராஜகோபால் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மரக்கன்றுகள் நடவு செய்தார்.