×

போகலூர் பகுதியில் மதுவிற்ற 3 பேர் கைது

பரமக்குடி, டிச.29:  போகலூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் உள்ள நிலையில் திருட்டுத்தனமாக மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். பரமக்குடி, போகலூர், நயினார்கோவில், முதுகுளத்தூ, சாயல்குடிஇ கடலாடி ஆகிய ஒன்றியங்களில் வரும் 30ம் தேதி இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் விதிமுறை உள்ள நிலையில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக  துணை வட்டாட்சியர் வரதராஜன் கொடுத்த புகாரின் பேரில், காக்கனேந்தல் பஞ்சவர்ணம்(54), சத்திரக்குடி கார்த்திகை சாமி(37), சோமனூர் காலனி பாண்டி (40) ஆகியோரை கைது செய்த சத்திரக்குடி போலீசார், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை