×

பவுர்ணமி, திருக்கார்த்திகையையொட்டி கடலாடி, முதுகுளத்தூர் பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை

சாயல்குடி, டிச. 11: கடலாடி, முதுகுளத்தூர் பகுதி கோயில்களில் திருகார்த்திகை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருகார்த்திகையை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை மங்களநாதர், மங்களேஸ்வரி கோயிலில் சிறப்பு அபிஷேகம், கிரிவலம் நிகழ்ச்சி நடந்தது. அபிராமம் சாய்கிருஷ்ணா கோயிலில் உள்ள சாய்பாபா, கிருஷ்ணர் சிலைகளுக்கு பால், இளநீர், மஞ்சள், திரவியம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பழங்கள் உள்ளிட்ட 11 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனையும், கூட்டு பிரார்த்தனையும் நடந்தது.
கடலாடி அருகே ஆப்பனூர் அரியநாயகி அம்மன், கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன், பத்திரகாளியம்மன், சந்தனமாரியம்மன், காமாட்சியம்மன், மாரியூர் பூவேந்தியநாதர், பவளநிறவள்ளியம்மன் கோயில், சாயல்குடி அருகே உள்ள காணிக்கூர் பாதாள காளியம்மன், பசும்பொன் தேவர் நினைவிடம், மேலக்கொடுமலூர் குமரன், முதுகுளத்தூர் சுப்ரமணியர். சாயல்குடி அருகே உள்ள கூரான்கோட்டை முனீஸ்வரர், டி.எம்.கோட்டை உச்சிமாகாளி ஆகிய கோயில்களில் திருவிளக்கு பூஜையும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அகல் விளக்கு ஏற்பட்டது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததையடுத்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.

Tags : Purnami ,Thirukarthikaryam ,Mudukulathur ,Kadaladi ,area temples ,
× RELATED முத்தான வாழ்வு தரும் சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு..!!