×

பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு படம் 3டி சேலையாக வடிவமைப்பு

பரமக்குடி, நவ.1:  மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு புகைப்படத்தை, பரமக்குடி நெசவாளர் 3டி சேலையாக  வடிவமைத்துள்ளார்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் அக்.11 மற்றும் 12ம் தேதி பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் பரமக்குடி மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் சார்பில் சீனிவாசன் என்ற நெசவாளர் இந்த சந்திப்பு புகைப்படத்தை நூல் சேலையில் நெசவு செய்து சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து சேலை வடிவமைப்பாளர் சீனிவாசன் கூறுகையில், நெசவாளர்கள் பெரும்பாலும் பட்டு சேலையில் தான் புகைபடத்துடன் கூடிய சேலைகளை தயாரிக்கின்றனர். ஒரு மாற்றத்திற்க்காக, தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு புகைப்படம் வைத்து நூல் சேலை தயாரிக்கபட்டுள்ளது. இந்த சேலையை நேராக பார்த்தால் இருநாட்டு தலைவர்கள் மட்டும் தெரியும் வகையிலும், சேலையின் பக்கவாட்டு பகுதியில் இருந்து, பார்த்தால் மாமல்லபுரம் சிற்பங்கள் தெரியும் வகையிலும் 3டி வடிவில் வடிவமைக்கபட்டுள்ளது.

இருநாட்டு தலைவர்கள் அடங்கிய சேலை, சென்னையில் நடைபெற்ற கைத்தறி கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. பொதுமக்களிடேயை பெரும் வரவேற்பை இந்த சேலை பெற்றுள்ளதால், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு படம் பொருத்திய, நூல் சேலை கேட்டு பலர் ஆர்டர் கொடுத்துள்ளனர் என்றார்.

Tags : President Meeting ,Chinese ,
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...