×

முன் அனுமதி பெறாமல் சாலையை தோண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பரமக்குடி, அக். 25: பரமக்குடி நகராட்சி பகுதியில் முன் அனுமதியின்றி சாலையை தோண்டுவது, சாலையை மறைத்து, கட்டுமான பொருள்களை கொட்டி வைப்பது போன்ற இடையூறுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் நகராட்சி சார்பாக தார்சாலை, சிமென்ட் சாலை, பேவர்பிளாக் மூலம் சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளது. மேலும், நிதி பற்றாக்குறையால் வார்டுகளில் உள்ள குறைகளை கேட்டறிந்து, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளுக்கு முன் உரிமை கொடுக்கப்பட்டு வருதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் எந்த பணிகளும் நடைபெறாமல் உள்ளது.குறிப்பாக தெருவிளக்கு, கழிப்பறை வசதிகள் படு மோசமாக உள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. பரமக்குடி நகராட்சி பகுதியில் முன் அனுமதி பெறாமல் கழிவுநீர் கால்வாய், தெரு சாலைகளில் ஆங்காங்கே குழிகள் தோண்டுவதுவதால் குடிநீர் குழாய்கள் உடைந்து நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வது பாதிக்கப்படுகிறது. கட்டிடம் கட்டுபவர்கள் முறையாக அனுமதி பெற்றாமல் சாலைகளில் குழிகள் தோண்டுவதும், கட்டிட பொருட்களை சாலையை மறைத்து கொட்டிவைத்து கொள்வதும், தண்ணீர் டேங்க் மற்றும் போர்வல்ஸ் போன்ற பணிகளால் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முன் அனுமதி பெற்றாலும் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் பொருள்களை வைத்து கொள்ளவேண்டும். மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கையுடன் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road diggers ,
× RELATED முன் அனுமதி பெறாமல் சாலையை...