×

சரக்கு வாகனத்துடன் வியாபாரி கடத்தல்

சாயல்குடி. அக். 24: சாயல்குடி அருகே கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் வியாபாரி சரக்கு வாகனத்துடன் கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தைச் சேர்ந்த வியாபாரி காளிதாஸ் (55). இவர் தற்போது பரமக்குடி பாலன் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், விருதுநகர் மாவட்டம் பரளச்சி அருகே மேலக்கல்லக்காரி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் கடனாக பணம் வாங்கியுள்ளார். அதில் குறிப்பிட்ட தொகையை  திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் சாயல்குடி அருகே செவல்பட்டி சோதனைச்சாவடி அருகே நேற்று முன்தினம் சரக்கு ஆட்டோவில் சென்ற காளிதாஸை, 10 பேர் கொண்ட கும்பம், சரக்கு வாகனத்துடன் கடத்திச் சென்றது. இதுகுறித்து காளிதாசின் மனைவி சந்திரா, சாயல்குடி போலீசில் புகார் செய்தார். அதனடிப்படையில் போலீசார், மாரிமுத்து மற்றும் 10 பேர் காளிதாசை சரக்கு வாகனத்துடன் கடத்திச் சென்றதாக வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை