×

திருப்பாலைக்குடி பகுதியில் உப்பு விளைச்சல் அமோகம்

ஆர்.எஸ்.மங்கலம், அக்.10:  திருப்பாலைக்குடி பகுதியில் உப்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால், தொழிலாளர்கள் உப்பு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பாலைக்குடி சம்பை பகுதிகளில் உள்ள உப்பளங்களில் உப்பு விளைச்சல் அமோகமாக நடைபெறுகிறது. பாத்திகளில் விளைந்த உப்புக்களை உப்பளத் தொழிலாளர்கள் தீவிரமாக சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளைவிக்கக் கூடிய உப்பு பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. குறிப்பாக மீன் பதப்படுத்துதல் போன்றவற்றிற்கு அதிகமாக உப்புகளை வாங்குகின்றனர். கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக சரியான மழை பெய்யாததால் விவசாயம் பொய்த்து போய் விட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உப்பு சேகரிப்பு பணியில் சேர்ந்து வருவாயை ஈட்டி வருகின்றனர். உப்பள உரிமையாளர்களுக்கு உப்பு விளைச்சல் அதிகம் இருந்தும் உரிய விலை கிடைக்கவில்லை என புலம்புகின்றனர். இருந்த போதிலும் ஏதோ இத்தொழில் மூலமாக 10 பேருக்கு வேலை கொடுக்கின்றோம் என்ற திருப்தி தானே தவிர தற்போது உள்ள விலைவாசியால் பெரிதாக லாபம் ஒன்றும் இல்லை என்று புலம்பி வருகின்றனர். உப்பளங்களில் விளையும் உப்புகளை அரசே நல்ல விலை கொடுத்து கொள்முதல் செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர்.

Tags : area ,Tirupalakudi ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...