×

மாட்டு வண்டி பந்தயம் திருநெல்வேலி முதலிடம்

சாயல்குடி, அக்.10:  வில்லனேந்தல் கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. சாயல்குடி அருகே வில்லனேந்தல் அழகுவள்ளி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா கடந்த வாரம் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. அக்னிசட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தி வழிபட்டனர். விழா முடிந்து நேற்று பெரியமாடு, சின்னமாடு என இரு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. வில்லனேந்தலில் இருந்து கமுதி சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பெரிய மாட்டு வண்டி போட்டியில் 7 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது. இதில் கே.இலந்தைகுளம் வீரமுனியசாமி மாடுகள் முதலிடத்தையும், கடுகுசந்தை ஆறுதலின் ஏசு மாடுகள் இரண்டாம் இடத்தையும், கெச்சில்சாமி அஜித்குமார் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

7 கிலோ மீட்டர் தூரம் நடந்த சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 12 மாட்டுவண்டிகள் பங்கேற்றது. இதில் திருநெல்வேலி மாவட்டம் முத்தூர் மாடசாமி மாடுகள் முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்டம், சிங்கிலிபட்டி முருகபாண்டி மாடுகள் இரண்டாமிடத்தையும், தங்கமாள்புரம் மாயகார்த்திக் மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன. இரண்டு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கும், வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்க பரிசும், குத்துவிளக்குகளும் பரிசுகளாக வழங்கப்பட்டது.

Tags : Cow car racing ,Tirunelveli ,
× RELATED மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!