×

ஆத்தூரில் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

ஆத்தூர், செப்.30: ஆத்தூரில், கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆத்தூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், புதிய கல்வி கொள்கை 2019 திரும்பப் பெறக் கோரியும், அரசு பள்ளிகளை பாதுகாத்திடவும், மூடிய 48 பள்ளிகளை திறக்க கோரி பிரசார இயக்கம் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பெரியசாமி வரவேற்றார். செல்வம், கலைமணிஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரசாரத்தை விளக்கி மேற்கு மண்டல மாநில துணைத் தலைவர் ஜான் கிறிஸ்துராஜ், மேற்கு மண்டல மாநில செயலாளர் வின்சென்ட் ஆகியோர் பேசினர். பிரசார இயக்கத்தில் 50க்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags : Education Security Awareness Campaign ,Attur ,
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...