×

கொங்கணாபுரத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி

இடைப்பாடி, செப். 26:  இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் வேளாண் அலுவலகத்தில், வட்டார அளவிலான தேசிய மானாவாரி வேளாண் இaயக்கம் அட்மா திட்ட குழு சார்பில், விவசாயிகள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் மற்றும் உரம், செடிகள் இலவசமாக வழங்கும் விழா நடந்தது. இந்த முகாமிற்கு அட்மா திட்ட குழு தலைவர் கரட்டூர் மணி தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.வேளாண் ணை இயக்குனர் சிங்காரம், வேளாண் அலுவலர் ராதா ருக்மணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், செந்தில்குமார், துணை வேளாண் அலுவலர் சக்திவேல், உதவி வேளாண் அலுவலர்கள் சிவக்குமார், விஜயகுமார், விக்னேஷ், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு செம்மரம், தேக்கு, மகாகனி, ஈட்டி மரக்கன்றுகள் 2 ஆயிரம் இலவசமாக வழங்கப்பட்டது.

Tags :
× RELATED சேகோ ஆலையில் பணியாற்றிய வடமாநில வாலிபர் திடீர் மாயம்