×

ராமநாதபுரம் தினைக்குளம் அருகே ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

ராமநாதபுரம், ஜுன் 18:  ராமநாதபுரம் தினைக்குளம் அருகே வேதக்காரன் வலசை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என கிராமத்தை சேர்ந்த கடல் தேவதை இளைஞர் மன்றம் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.மனுவில் திருப்புல்லாணி ஒன்றியம் தினைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் விஷ பூச்சிகள், பாம்புகள், பள்ளி வளாகத்தில் வலம் வருகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் படிப்பதில் கவனம் செலுத்த முடியாமல்  அச்சப்படும் நிலை ஏற்படுகிறது. மாணவ மாணவிகளின் நலன் கருதி சுற்றுச்சுவர் அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : village ,Ramanathapuram ,Thanikulam ,
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....