×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே நாளை மக்கள் தொடர்பு முகாம்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 11:  ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருத்தேர் வளை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற வட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் பிர்க்காவிற்கு உட்பட்ட திருத்தேர் வளை கிராமம் சமுதாயக் கூடத்தில் நாளை(12ம் தேதி) மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் திருத்தேர்வளை, ஆய்ங்குடி, கீழக்கோட்டை, நாட்டார்கோட்டை போன்ற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களை கொடுக்கலாம். முக்கியமாக பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை பெறுதல் சம்மந்தமான மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்து உரிய பரிகாரம் தேடிக் கொள்ள அறிவுறுத்தப்படுவதாக ஆர்.எஸ் மங்கலம் வட்டாட்சியர் தமீம் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : People's Communications Camp ,RS Mangal ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே மக்கள் தொடர்பு முகாம்