×

மண்டபம் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா

ராமநாதபுரம், ஜூன் 11:  மண்டபம் ஒன்றிய திமுக சார்பில் சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். குயவன்குடி ஊராட்சி செயலாளர் முருகபூபதி வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில், மாவட்டத்தில் மக்களின் அடிப்படை பிரச்னையாக உள்ள குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் நேரத்தில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்படும். ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் முதல் திட்டமாக ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வியை தொடர இலவச உதவித்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் வசதியில்லாத நிலையில் கல்லூரி படிப்பை தொடர முடியாத மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கட்டணத்தை வழங்க உள்ளோம். இதன் மூலம் நமது பாராளுமன்ற தொகுதியில் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிக்க முடியும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்  என்றார். மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பேசுகையில், நவாஸ்கனி வெற்றிக்காக இரவு பகல் பாராது உழைத்திட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொருளாளர் ஷாஜகான், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, முன்னாள் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் மற்றும்  மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Mandapam ,ceremony ,voters ,DMK ,
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை