×

தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி

கிருஷ்ணகிரி, ஜூன் 11:  கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே வாத்தியார்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் மகன் சக்திவேல்(37). கூலி தொழிலாளியான இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை பவன்தேஜா, நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணிக்கு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. இதை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து பவன்தேஜாவை காணாமல் தேடியுள்ளனர். அப்போது, தொட்டிக்குள் விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்திருப்பதை கண்டு கதறி துடித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், பர்கூர் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : baby girl ,
× RELATED மூன்றாவதாக பிறந்த பெண் சிசு திடீர் சாவு