×

மூன்றாவதாக பிறந்த பெண் சிசு திடீர் சாவு

கிருஷ்ணகிரி, அக்.17: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக இருப்பவர் காயத்ரி. இவர் குருபரப்பள்ளி போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் மேட்டுபாளையத்தை சேர்ந்த செம்பருத்தி என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன் பிரசவத்திற்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே, நேற்று முன்தினம் அந்த பெண் சிசு இறந்துவிட்டதாக தெரிவித்தார். அந்த குழந்தையின் சாவில் சந்தேகம் உள்ளது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் குருபரப்பள்ளி போலீசார் சிசுவின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூன்றாவதாக பிறந்த பெண் சிசு திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Gayatri ,Nachikuppam Primary ,Health Center ,Veppanahalli, Krishnagiri district ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்