×

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கிராமங்கள் தோறும் உலர் களம் மிளகாய் விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 4: ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டாரங்களில் கிராமங்கள் தோறும் மிளகாய்க்கு உலர் களம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘ தமிழகத்திலேயே அதிகமான மிளகாய் விளையக் கூடிய பகுதிகளில் ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டாரப் பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக மழை பொய்த்து போனதால் இப்பகுதியில் நெல் விவசாயம் முற்றும் பாதிக்கப்பட்டு விட்டது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக ஜீவனாம்சம் செய்ய வழிவகுப்பது மிளகாய் விவசாயம் மட்டுமே.

மிளகாய் பழங்களை பறித்து உலர்த்துவதற்கு விவசாயிகளுக்கு சரியான உலர் களங்கள் இல்லை. இதனால் விவசாயி தங்கள் தங்கள் தோட்டங்களில் விளைவித்து பறித்த மிளகாய் பழங்களை காடு, மேடு, வயல்வெளிகளில் உலரப்போடுவதால் மிளகாய் காய்ந்த பின்னர் அந்த மிளகாய் வத்தல் கலர் மங்கிய நிலையிலும், அதிகமான மிளகாய் வெள்ளை நிறமாக பழுப்படைந்து விடுகிறது.

இதனால் மிளகாய் வத்தலுக்கு உரிய விலை கிடைக்காமல் போய் விடுகிறது. கஷ்டப்பட்டு விளைவித்து பயனில்லாமல் போய் விடுவதாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர். இதற்கு ஒரு நிரந்தர தீர்வாக உலர்களம் அமைத்துக் கொடுத்தால் மிளகாய் வத்தல் கலர் மங்காமல் நல்ல சிகப்பு நிறமாக இருக்கும். அதிகபட்ச விலையும் கிடைக்க வாய்ப்பாக இருக்கும். ஆகையால் அரசு சார்பாக உலர்களங்களை அமைத்துக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : chilli farmers ,RMS Mangalam ,
× RELATED மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் புற்களைதேடி அலையும் ஆடு, மாடுகள்